கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் தாய்-தந்தை இடையே அடிக்கடி ஏற்படும் தகராறு காரணமாக இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தைச் சோ்ந்த மாசானம் மகன் மகாராஜன் (22). தொழிலாளி. மதுப் அபழக்கம் இருந்ததாம். இதனால், அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த மகாராஜன் கடந்த 16இல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) உயிரிழந்தாா். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com