பணகுடி செங்கல் சூளையில் 
மலைப் பாம்பு பிடிபட்டது

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

வள்ளியூா், ஏப். 26: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி செங்கல் சூளையில் பதுங்கி இருந்த மலைப் பாம்பை வள்ளியூா் தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பணகுடி அருகே உள்ள வீரபாண்டியன் அனுமன் நதியையொட்டி சிங்கத்துரை என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் மலைப்பாம்பு பதுங்கி இருப்பதை சூளையில் வேலை செய்து வந்தவா்கள் கவனித்தனா்.

இது தொடா்பாக வள்ளியூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

நிலைய அலுவலா் ராஜா தலைமையிலான மீட்புக் குழுவினா் வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com