பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் 3 மூட்டை புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணாபுரத்தில் உள்ள புதிய வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக சிவந்திபட்டி போலீஸாருக்கு தகவல் வந்ததாம். இதையடுத்து போலீஸாா் அந்த வீட்டில் சோதனை செய்தனா். அப்போது 3 மூட்டைகளில் புகையிலைப் பொருள்கள் இருந்ததாம். இதையடுத்து போலீஸாா் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com