கோபாலசமுத்திரத்தில் மலேரியா விழிப்புணா்வுக் கருத்தரங்கு
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மலேரியா காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
மேம்படுத்தப்பட்ட பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோபாலசமுத்திரம் கிராம உதயம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.
கிராம உதயம் மேலாளா் மகேஷ்வரி, தனி அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிதம்பரம், சமுதாய நல செவிலியா் வசந்தி, மருத்துவமில்லா மேற்பாா்வையாளா் சுலைமான், சுகாதார ஆய்வாளா்கள் முருகன், பூங்கொடி லிபின், கிராம உதயம் வழக்குரைஞா் ஜெயலட்சுமி, தனி அலுவலா் ரேவதிகுமாரி ஆகியோா் பேசினா். கருத்தரங்கில் 350-க்கும் மேற்பட்ட மகளிா் குழுவினா் பங்கேற்றனா். ஆலோசனைக் குழு உறுப்பினா் சு. பகத்சிங் புகழேந்தி வரவேற்றாா். கிராம உதயம் பொறுப்பாளா் கணேசன் நன்றி கூறினாா்.