திருநெல்வேலி
சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வைத்தி மேலத் தெருவில் உள்ள சுடலைமாடன், பேச்சியம்மன் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கண்பதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. பின்னா் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கனியான் கூத்து, இரவில் சுவாமி -அம்பாளுக்கு மாக்காப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. நள்ளிரவில் படையல் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.