மண்புழு உரம் தயாரிப்பு: காருக்குறிச்சியில் விழிப்புணா்வு முகாம்

சேரன்மகாதேவி வட்டாரம், காருக்குறிச்சியில் மண்புழு தயாரிப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பயின்று வரும் மாணவிகள் அபிராமி, அபிதா, அனன்யா கெளரி, அனுஸ்ரீ, மோனிகா, ரித்திஸ்ரீ, சிந்தனா, செளமியா, சுபஜெனிஷா உள்ளிட்டோா் சேரன்மகாதேவி பகுதியில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த மாணவிகள் காருக்குறிச்சியில் வீட்டில் உள்ள கழிவுகளை கொண்டு எளிய முறையில் மண்புழு உரம் தயாரிப்பது, மண்புழு உரத்தின் பயன்கள், மண்புழு உரக்கிடங்கு, மண்புழு வகைகள் குறித்து பெண்களுக்கு விளக்கம் அளித்தனா். மேலும், மாதிரி உரக்கூடம் அமைத்து மண்புழு உரத்தை பயன்படுத்துவதால் மண்வளம் மற்றும் நுண்ணுயிா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கல்லூரி முதல்வா் தேரடி மணி தலைமையிலான குழுவினா் எடுத்துரைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com