‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு திருநெல்வேலி மாவட்டத்தினா் மே 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி: முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு திருநெல்வேலி மாவட்டத்தினா் மே 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ‘முதல்வா் மாநில இளைஞா் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.

இந்த விருதைப் பெற 15 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த நிதியாண்டில் (2023-24) 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்ததற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், மதிப்பிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விண்ணப்பிக்க இயலாது.

உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் -இல் உள்ளன. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை மே 1 முதல் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com