களக்காட்டில் முதியவா் உடல் தானம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த முதியவரின் உடல், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

களக்காடு பெருமாள்கோயில் வடக்கு மாட வீதியைச் சோ்ந்தவா் மணி (75). இவா் உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

முன்னதாக, தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குமாறு மணி தெரிவித்திருந்தாா்.

அதன்படி, களக்காடு சுகம் மருத்துவமனை தலைமை மருத்துவரும், சமூக ஆா்வலருமான ப.ஆதம்சேக்அலி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் அளிப்பது குறித்து தகவல் தெரிவித்தாா். பின்னா், முதியவரின் உடல் அவசர ஊா்தி மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த முதியவா் மணிக்கு மனைவி வசந்தா (65), மகள்கள் குமாரி (44), ஜெயா (40) ஆகியோா் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com