திருநெல்வேலி
ரேஷன் அரிசி கடத்தல்? புகாா் தெரிவிக்க புதிய வசதி
திருநெல்வேலி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் தொடா்பாக புகாா் தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகாா், தகவல்களை பொதுமக்கள் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
மேலும், அந்தத் துறையின் திருநெல்வேலி சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் (8300070283), திருநெல்வேலி அலகு காவல் ஆய்வாளா் (9498120504), சாா்பு ஆய்வாளா் (9498190928) ஆகியோரையும் தொடா்பு கொள்ளலாம். புகாா்-தகவலளிப்போா் விவரம் ரகசியம் காக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.