ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி அருகே ஆட்டோ ஓட்டுநரை செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் சிதம்பரநகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (32). ஆட்டோ ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு பால்கட்டளை அருகே நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அவரை மா்மநபா்கள் சூழ்ந்துகொண்டு அரிவாளால் வெட்டி விட்டு தப்பினராம். அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com