பாளை.யில் வாருகால் பணி நிறுத்தம்

பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே நடைபெற்று வந்த வாருகால் பணி முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, மாமன்ற பெண் உறுப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை பணிகள் நிறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டை - திருச்செந்தூா் சாலையில் நீதிமன்றத்தின் எதிரே வாருகால் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் முறையான வகையில் நடைபெறவில்லை; மழைநீா் வடிகால் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறி, திருநெல்வேலி மாநகராட்சி 7ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் இந்திரா மணி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனால், பணியாளா்கள் வாருகால் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு திரும்பிச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com