ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

நான்குனேரி அருகே வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள தெய்வநாயகிபுரம் விலக்குப் பகுதியில், திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சுமை வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அதில், 840 கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளில் கட்டி கடத்தி செல்வது தெரியவந்தது. வாகனத்துடன் அரிசியைக் கைப்பற்றிய போலீஸாா், அதை கடத்தி வந்ததாக நான்குனேரி அருகே வடக்கு நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்த செல்லபாண்டி (54), இசக்கி ராஜா (24) ஆகியோரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com