அரவக்குறிச்சியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 5 சேவல் மற்றும் பணம் ரூ.27,000 பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சீத்தப்பட்டியில் உள்ள பகவதியம்மன் கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சேவல் சண்டை நடத்திய அரவக்குறிச்சி மூலப்பட்டியைச் சேர்ந்த பாரி(40, கருவேலம்பட்டி மணிவேல்(33), அரவக்குறிச்சி ராமசாமி(65) உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 சேவல்கள் மற்றும் சூதாட்டப்பணம் ரூ.27,730-ஐயும் பறிமுதல் செய்தனர்.