திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே வனத்துறைக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர்.
மண்ணச்சநல்லூர் வட்டம், எதுமலை- பெரகம்பி கிராமங்களுக்கு இடையே வனத்துறைக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில்
சிறுகனூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று சடலத்தை கைப்பற்றினர்.
இறந்த நபருக்கு சுமார் 35 வயதுக்கு மேல் இருக்கலாம். 3 நாள்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்
என்பது தெரியவில்லை. சிறுகனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.