மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக புத்தனாம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை (டிச.7) மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் துறையூர் கோட்டப் பொறியாளர் பொன். ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (டிச.7) மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புத்தனாம்பட்டி,
அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், டி.களத்தூர், புலிவலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின் விநியோகம் இருக்காது.