வைகுந்த ஏகாதசி:  ஸ்ரீரங்கத்தில் நாளை பந்தக்கால்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி விழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை  (அக்.23) நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி விழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை  (அக்.23) நடைபெறவுள்ளது.
டிச. 18 தொடங்கி 2018 ஜன. 8 வரை நடைபெறவுள்ள வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் பந்தல் அமைக்கும் பணிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு நடைபெறுகிறது. நிகழாண்டில் வைகுந்த ஏகாதசி விழா டிச. 18-ல் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல்பத்து விழா 19- ஆம் தேதியும், விழாவின் முக்கிய நிகழ்வான வைகுந்த ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு டிச. 29-ஆம் தேதியும், மோகினி அலங்காரம் 28-ஆம் தேதியும் நடைபெறுகிறது.  ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர்  பொன். ஜெயராமன், அறங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com