காவிரிப் பாலத்திலிருந்து விழுந்து பெண் பக்தர் சாவு

காவிரி பாலத்திலிருந்து தவறி விழுந்து பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

காவிரி பாலத்திலிருந்து தவறி விழுந்து பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருச்சி கீழ அம்பிகாபுரத்தைச் சேர்ந்தவர் லலிதா (45). இவர், தனது மகள் மோனிகா மற்றும் உறவினர்களுடன் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக  சென்றார். திங்கள்கிழமை இரவு திருச்சி-சென்னை சாலையில் பழைய காவிரிப் பாலத்தில் செல்லும்போது தவறி விழுந்து உயிரிழந்தார். 
அவருடன் விழுந்த மோனிகா பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். 
பாதையாத்திரையாக வந்தபோது வாகனம் மோதி கீழே விழுந்தனரா, இருளில் தவறி விழுந்ததில் ஒருவரையொருவர் காப்பாற்ற இருவரும் விழுந்தனரா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக ஸ்ரீ ரங்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com