மே 10 முதல் 22 வரை வருவாய் தீர்வாயம்: ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் 1,427ஆம் பசலி ஆண்டுக்கான (2017-18) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் மே 10 தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் 1,427ஆம் பசலி ஆண்டுக்கான (2017-18) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் மே 10 தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, ஆட்சியர் கு. ராசாமணி கூறியது:
பொதுமக்களின் வருவாய் நிர்வாகம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனுக்களை அளித்து தீர்வு காணும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தனி அலுவலர்களை நியமித்து வருவாய் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது. 
இதன்படி, ஆட்சியர் தலைமையில் லால்குடி வட்டாட்சியரகத்தில் வரும் 10ஆம் தேதி புள்ளம்பாடி, 11ஆம் தேதி பெருவளப்பூர், 15ஆம் தேதி கல்லக்குடி, 16ஆம் தேதி வாளாடி, 17ஆம் தேதி வாளாடி தொடர்ச்சி, 18ஆம் தேதி கீழன்பில், 22ஆம் தேதி லால்குடி ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறும்.
இதேபோல, மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர் தலைமையில் துறையூர் வட்டாட்சியரகத்தில் தீர்வாயம் நடைபெறுகிறது. மே10 இல் கொப்பம்பட்டி, 11இல் உப்பிலியபுரம், 15இல் எரக்குடி, 16இல் செங்காட்டுப்பட்டி, 17இல் கண்ணனூர், 18இல் துறையூர் ஆகிய கிராமங்களுக்கு நடைபெறும்.
சார் ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில், திருவெறும்பூர் வட்டாட்சியரகத்தில் மே 10இல் நவல்பட்டி, 11இல் வேங்கூர், 15இல் திருவெறும்பூர் ஆகிய கிராமங்களுக்கும்,
ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் பொன்ராமர் தலைமையில், மருங்காபுரி வட்டாட்சியரகத்தில் மே 10 இல் துவரங்குறிச்சி, 11இல் வளநாடு, 15இல் மருங்காபுரி ஆகிய கிராமங்களுக்கும் தீர்வாயம் நடைபெறுகிறது.
லால்குடி கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு தலைமையில், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியரகத்தில் மே 10 இல் கரியமாணிக்கம், 11இல் மண்ணச்சநல்லூர், 15இல் சிறுகாம்பூர் கிராமங்களுக்கு தீர்வாயம் நடைபெறும்.
முசிறி கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில், முசிறி வட்டாட்சியரகத்தில் மே 10 இல் தா.பேட்டை, 11இல் வளையெடுப்பு, 15இல் தும்பலம், 16இல் முசிறி, 17இல் புலிவலம், 18இல் ஆமூர் ஆகிய கிராமங்களுக்கு தீர்வாயம் நடைபெறுகிறது.
தனித் துணை ஆட்சியர் பாலாஜி தலைமையில், ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் மே10 இல் அந்தநல்லூர், 11இல் குழுமணி, 15இல் சோமரசம்பேட்டை, 16இல் மணிகண்டம், 17இல் ஸ்ரீரங்கம் ஆகிய கிராமங்களுக்கு தீர்வாயம் நடைபெறும்.
மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 10 இல் திருச்சி வடக்கு, 11இல் திருச்சி தெற்கு ஆகிய பகுதிகளுக்கான தீர்வாயம் நடைபெறுகிறது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் பழனிதேவி தலைமையில், மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மே10 இல் வீ. பெரியபட்டி, 11இல் வையம்பட்டி, 13இல் பண்ணப்பட்டி, 16இல் மணப்பாறை ஆகிய கிராமங்களுக்கு தீர்வாயம் நடைபெறும்.
தனித்துணை ஆட்சியர் சிவக்குமாரி தலைமையில், தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மே10 இல் ஏலூர்பட்டி, 11இல் காட்டுப்புத்தூர், 15இல் தொட்டியம் ஆகிய கிராமங்களில் தீர்வாயம் நடைபெறும். மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சௌந்தரராஜ் தலைமையில், திருச்சி கிழக்கு வட்டாட்சியரகத்தில் மே10 இல் திருச்சி வடக்கு, 11இல் திருச்சி தெற்கு ஆகிய பகுதிகளுக்கு தீர்வாயம் நடைபெறும். எனவே, அந்தந்த பகுதி பொதுமக்கள் தீர்வாய நாளில் கோரிக்கை மனுக்களை அளித்து உரிய தீர்வு காணலாம் என்றார் ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com