திருப்பூர் மாவட்டத்தில் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு செவிலியர் சங்கத் தலைவி சாந்தி தலைமை வகித்தார். இதில், செயலாளர் செண்பகவள்ளி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.