மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் தினமும் காலையில் குப்பை வண்டிகள் வந்து வீடுகளில் சேகாரமாகும் குப்பையை பணியாளர்கள் பெற்றுச் செல்கின்றனர்.
இந்நிலையில், பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் வசூலிக்கும் பணியாளர்கள் குப்பை சேகரிப்பதற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டணம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், ரூ. 50 வீதம் நிலுவையில் உள்ள மாதங்களுக்கு குப்பை கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே குடிநீர் கட்டணத்தைப் பெற்றுக் கொள்வோம் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கையாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் வற்புறுத்திக் கூறி வருகின்றனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டண வசூலை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.