மலேசியாவுக்கு, கடத்த முயன்ற ரூ. 5.94 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சியிலிருந்து மலேசியா செல்லும் மலிண்டோ விமானம் சனிக்கிழமை இரவு புறப்படத் தயாராக இருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த ரெஜியா பானு சுபையர் (59) என்ற பெண்மணி தனது கைப்பையில் ரூ. 5.94 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்களை (கரன்சிகள் - அமெரிக்க டாலர் 7,100 மற்றும் மலேசிய ரிங்கிட் 6,700 ) மறைத்து கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.