செங்காட்டுப்பட்டி பள்ளியில் பரிசளிப்பு விழா

தேசிய நூலகவார விழாவையொட்டி செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு

தேசிய நூலகவார விழாவையொட்டி செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகளை வழங்கினர்.
செங்காட்டுப்பட்டி கிளை நூலகம் சார்பில்,அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டடிருந்தன. போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு வழங்கும் விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் கோபால் தலைமை வகித்தார். துறையூர் சட்டப்பேரவை உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் விழாவில் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசினார். தொடர்ந்து, நூலக விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவமாணவிகள் பங்கேற்று நூலகம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி முக்கிய வீதிகளில் சென்றனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நூலகர் உமாமகேசுவரி, நூலகப் பணியாளர் மாணிக்கம் செய்திருந்தனர்.  முடிவில் ஆசிரியை ரமா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com