பாரத மிகுமின் நிறுவனத்துக்கு இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகத்தின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில்அடக்கவிலை மேலாண்மையில் உன்னதத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பெல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அதுல் சோப்தி, நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் சுபோத்குப்தா ஆகியோரிடம் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறைக்கான அமைச்சர் பியூஷ் கோயல் இந்த விருதை வழங்கிப் பேசினார்.