லலிதாம்பிகை கோயிலில்  திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை லலிதாம்பிகை கோயிலில்  வெள்ளிக்கிழமை இரவு பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை லலிதாம்பிகை கோயிலில்  வெள்ளிக்கிழமை இரவு பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
இக்கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.
முசிறி, தொட்டியம், மணமேடு, அலகரை, கொளக்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து 300-க்கும்  மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை லலிதா மகிளா ஸமாஜ  யோகினிகள் வித்தியாம்பா சரஸ்வதி, நிர்மலாம்பா சரஸ்வதி தலைமையில் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com