திருச்சியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் உரக்கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
திருச்சி தில்லைநகர் 11ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (33). இவர் உரக்கடை நடத்தி வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலை புறவழிச்சாலை சஞ்சீவி நகர் அருகே வந்தார்.
அபேபோது எதிரே வந்த லாரி மோதியதில் உயிரிழந்தார். திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.