திருச்சி
ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 19 பவுன் நகைகள் திருட்டு
திருச்சி அருகே ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி வீட்டில் 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி அருகே ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி வீட்டில் 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நவலூர்குட்டப்பட்டு கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(60). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. இவர், ஈஸ்டர் பண்டிகைக்காக சனிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்றார்.
அங்கு திருப்பலி முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகைகளை திருடு போயிருந்தது. இதுகுறித்து ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம் நபரை தேடி வருகின்றனர்.