திருச்சியில் உள்ள பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழக மையத்தில் ஜிஎஸ்டி குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் ஆக. 20 ஆம் தேதி நடைபெற்றது.
திருச்சி புல முதல்வர் டி.ஜெ. ஜெயசீலன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை பேராசிரியர்கள் உஷா, பாலாஜி முருகன் ஆகியோர் ஜிஎஸ்டி குறித்தும், அவற்றின் பயன்பாடு மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினர். பேராசிரியர்கள் கே.ஜி. செல்வன், சாந்தி ஜூப்ளி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.