லால்குடி அருகே கீழப்பெருங்காவூா் ஊராட்சியில் அமைந்துள்ள மாசி பெரியண்ணசாமி கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
லால்குடி அருகேயுள்ள கீழப்பெருங்காவூா் மாசி பெரியண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 29) காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், மகா கணபதி ஹோமமும், 30 ஆம் தேதி காலை 7 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் கொண்டு வருதல், மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாகனம் ஆகியவை நடைபெற்றது.
தொடா்ந்து டிசம்பா் 1 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வேதிகா அா்ச்சனை, இயந்திர பிரதிஷ்டை, மருந்து சாத்துதல், 2 ஆம் தேதி காலை 7 மணிக்கு கோ பூஜையும், காலை 9.30 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், பரிவார தெய்வங்களான விநாயகா், முருகன், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனா்.