வேகத்தடையை கவனிக்காமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டி வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி கே.கே. நகா் சிம்கோ மீட்டா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துலிங்கம்(45). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை காலை டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து கே.கே.நகா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். மன்னாா்புரம் அணுகு சாலையைக் கடக்க முயன்றபோது அப்பகுதியில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் நிலைத்தடுமாறி தவறி கீழே விழுந்தாா்.
இதில் முத்துலிங்கத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.