திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் ஜனவரி 17 ஆம் தேதி சுற்றுலாப் பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண்டு தோறும் திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்ளும் சுற்றுலாப் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான விழா ஜன. 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு முக்கொம்பு சுற்றுலா தலத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தப்பாட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். சுற்றுலாப் பயணிகள்,பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.