திருச்சி மாவட்டம், தொட்டியம் தா.பேட்டை ஒன்றியத்தில் தும்பலம் மற்றும் கொளக்குடி ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பேசுகையில், திமுக ஆட்சியமைத்த பின் உள்ளாட்சிகளில் தடையாக உள்ள அடிப்படை வசதிகளை செய்து தருவோம் என்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி, ஊராட்சி செயலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.