துறையூர் அருகே பைக்கில் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
துறையூர் வட்டம் பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் குமரேசன் (19). கரட்டாம்பட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். வியாழக்கிழமை இரவு பைக்கில் சென்ற குமரேசன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். புலிவலம் போலீஸார் சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.