மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.3.5 லட்சம் மதிப்பிலான இந்திய பணம் திருச்சி விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமானநிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை காலை மலிண்டோ விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. முன்னதாக விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை திருச்சி விமானநிலைய சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, புதுக்கோட்டையை சேர்ந்த பெண் பயணி பஷிரா பேகம்(51) என்பவர் தனது உடைமையில் மறைத்து ரூ.3.5 லட்சம் இந்திய பணத்தை கடத்த முயன்றது தெரிய வந்தது. மலேசியாவிற்கு கடத்த முயன்ற இந்தப் பணத்தை பறிமுதல் செய்த சுங்க துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.