கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் ஆவணங்களை குடியேற்ற பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரஸ் பகுதியைச் சேர்ந்த ஹேர்சிங் (23) என்பவரது கடவுச்சீட்டில் சந்தேகமடைந்த அதிகாரிகள் தீவிர சோதனை செய்ததில் கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு வந்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து குடியேற்ற பிரிவு அதிகாரிகள் விமான நிலைய காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து ஹேர்சிங்கை கைது செய்தனர்.