செல்லிடப்பேசியை பறிக்க முயற்சி: இருவர் கைது

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே, நடந்து சென்ற இளைஞரிடம் செல்லிடப்பேசி திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே, நடந்து சென்ற இளைஞரிடம் செல்லிடப்பேசி திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி கே.கே.நகர் சாரதா தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்(28). இவர்  ஞாயிற்றுக்கிழமை மாலை மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரிஸ்டோ வளைவுப் பகுதியில் நடந்து சென்றார். 
அப்போது அங்கு வந்த கொட்டப்பட்டு திவாகர்(28), சுரேந்தர்(18) ஆகிய இருவரும், சக்திவேல் வைத்திருந்த செல்லிடப்பேசியை மிரட்டி பறிக்க முயற்சித்தனர்.
 இதை கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து, கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சக்திவேல் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து திவாகர், சுரேந்தரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com