துறையூர் அருகே கீரம்பூரைச் சேர்ந்த ரா. பெருமாள் (45) தனது வீட்டுச் சுவற்றில் அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக கட்சி சின்னம் வரைந்திருந்தாராம்.
தகவலின் பேரில் துறையூர் காவல் உதவி ஆய்வாளர் ஹாரூண் நேரில் சென்று பார்வையிட்டபோது வீட்டு சுவற்றில் சின்னம் வரைந்திருந்ததால் தேர்தல் நடத்தை விதி மீறியதாக பெருமாள் மீது வழக்குப் பதிந்தார்.