ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், மகனைக் கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீரங்கம் வடக்குவாசல், கொள்ளிடக்கரைப் பகுதியில் வசித்து வருபவர் கொத்தனார் மகேந்திரன் (52). இவரது மகன் பிரசன்னா (17).
வேலைக்குச் செல்லாமல் ஊர்ச் சுற்றி வந்த பிரசன்னா, வீட்டுக்கு வரும் போது மது அருந்தி வருவாராம். திங்கள்கிழமை இரவும் மதுபோதையில் இருந்த பிரசன்னாவை அவரது தந்தை மகேந்திரன் கண்டித்தாராம். அப்போது, தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் தந்தையை பிரசன்னா குத்த முயன்றார்.
ஆனால், மகேந்திரன் அக்கத்தியை பிடுங்கி மகன் கழுத்தில் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த பிரசன்னா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸார் மகேந்திரனைகைது செய்து விசாரித்து வருகின்றனர்.