முசிறி மாரியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

முசிறியிலுள்ள மாரியம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

முசிறியிலுள்ள மாரியம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முசிறி பரிசல்துறை சாலையிலுள்ள அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், கீழத்தெரு மற்றும் கள்ளத்தெரு மாரியம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதில் முசிறி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவிரிக்குச் சென்று புனித நீராடி, அக்னிசட்டி எடுத்து வந்து கோயில்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பூஜைகளிலும், தீபாராதனைகளிலும் பக்தர்கள்பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com