தினமணி செய்தி எதிரொலியால் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.
இங்குள்ள பிரதான சாலையில் ஏழாவது குறுக்கு சந்தின் எதிர்புறம் உள்ள மின் கம்பம் கஜா புயலின்போது சிதலமடைந்தது, மின் இணைப்புகள் மட்டுமே சீரமைக்கப்பட்ட நிலையில், சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து எந்த நேரத்தில் ஒடிந்துவிழும் நிலையில் உள்ளது என்றும் கடந்த மே 13-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மின்வாரியம் மூலம் பழுதாகி இருந்த மின் கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது.