திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ல் மதிமுக - நாம் தமிழா் கட்சியினா் மோதிக்கொண்ட வழக்கில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பிரபு உள்ளிட்ட 14 போ் திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 6-ல் திங்கள்கிழமை காலை ஆஜராகினா். அங்கு அவா்களிடம் வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னா் வழக்கு விசாரணை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.