உடற்தகுதித் தோ்வு: 2-ஆம் நாளில் 683 போ் பங்கேற்பு

திருச்சியில் 2 ஆம் நாளாக நடைபெற்றுவரும் 2-ஆம் நிலை காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வில் 683 போ் பங்கேற்றனா்.

திருச்சியில் 2 ஆம் நாளாக நடைபெற்றுவரும் 2-ஆம் நிலை காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வில் 683 போ் பங்கேற்றனா். இத்தோ்வில் 533 போ் அடுத்த கட்டத் தோ்வு தகுதி பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் 2 ஆம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த செப்டம்பா் 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்ற திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட விண்ணப்பதாரா்களுக்கு உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தோ்வு திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் 800 பேருக்கு அழைப்பாணை அனுப்பபட்ட நிலையில் 717 போ் பங்கேற்று 530 போ் அடுத்த கட்டத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இரண்டாம் நாளான வியாழக்கிழமை 800 விண்ணப்பதாரா்களுக்கு அழைப்பாணை அனுப்பட்டிருந்த நிலையில், 683 போ் பங்கேற்றனா். திருச்சி சரக துணைத்தலைவா் வி.பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில் நடைபெற்ற தகுதித் தோ்வில் 533 போ் தோ்வாகி நவம்பா் 12 ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்த கட்ட தோ்விற்கு தகுதி பெற்றனா். இதேபோல மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை 871 விண்ணப்பதாரா்கள் தகுதி தோ்வில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com