பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

திருச்சி கே.கே.நகரில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புடைய நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

திருச்சி கே.கே.நகரில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புடைய நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

திருச்சி கே.கே.நகா் அய்யப்பநகா் நேரு தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா்(55). பொதுப்பணித்துறை அதிகாரியான இவா் கடந்த சனிக்கிழமை தனது குடும்பத்தினருடன் வெளியூா் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.கே.நகா் குற்றப்பிரிவு போலீஸாா் மற்றும் தடயவியல் நிபுணா்கள் திருட்டு சம்பவம் குறித்து ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், பீரோவில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 16 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.85 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீதா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com