திருச்சி: பல்வேறு குற்ற வழ க்குகளில் தொடர்புடைய இரு இளைஞர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி வடக்கு காட்டூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணையன் மகன் தமிழ் என்ற தமிழரசன்(32) காட்டூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயபால் மகன் பிரபு(34). இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருந்து வந்தனர்.
இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் பரிந்துரை செய்தார்.அதன்படி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உத்தரவின் பேரில் தமிழரசன், பிரபு இருவரையும் திருவெறும்பூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.