ரூ.14.50 லட்சம் மதிப்பிலான காசோலைகள் பறிமுதல்

திருச்சியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய  வாகனத் தணிக்கையில், ரூ.14.50 லட்சம் மதிப்பிலான 7 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய  வாகனத் தணிக்கையில், ரூ.14.50 லட்சம் மதிப்பிலான 7 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி காஜாமலை நகர் சாலையில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில்,  சென்னையைச் சேர்ந்த  ரஞ்சனிடம் ரூ.14.50 லட்சம் மதிப்பிலான 7 காசோலைகள் இருந்தன. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லை.
 இதையடுத்து காசோலைகளைப் பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினர், அவற்றை திருச்சி மாவட்டக் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com