திருச்சியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில், ரூ.14.50 லட்சம் மதிப்பிலான 7 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி காஜாமலை நகர் சாலையில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், சென்னையைச் சேர்ந்த ரஞ்சனிடம் ரூ.14.50 லட்சம் மதிப்பிலான 7 காசோலைகள் இருந்தன. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து காசோலைகளைப் பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினர், அவற்றை திருச்சி மாவட்டக் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.