காரை சேதப்படுத்திய  2 பேர் மீது வழக்கு

ஸ்ரீரங்கத்தில் காரை சேதப்படுத்தியதாக இருவர் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் காரை சேதப்படுத்தியதாக இருவர் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவானைக்கா மல்லிகை புரத்தில் வசிப்பவர் பாலசந்தர்.இவர் தனக்குச் சொந்தமான காரை வீட்டுவாசலில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நிறுத்தியிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் குடிபோதையில் தனது காரை சேதப்படுத்தியதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காரை சேதப்படுத்திய  பிரவின் (34), வசந்த் (32) ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com