ஸ்ரீரங்கத்தில் காரை சேதப்படுத்தியதாக இருவர் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவானைக்கா மல்லிகை புரத்தில் வசிப்பவர் பாலசந்தர்.இவர் தனக்குச் சொந்தமான காரை வீட்டுவாசலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்தியிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் குடிபோதையில் தனது காரை சேதப்படுத்தியதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காரை சேதப்படுத்திய பிரவின் (34), வசந்த் (32) ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.