தண்டவாளம் அருகே ஆண் சடலம்

திருச்சி அருகே  ரயில் பாதையில் ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை கிடந்தது.


திருச்சி அருகே  ரயில் பாதையில் ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை கிடந்தது.
திருச்சி- திண்டுக்கல் மார்க்கத்தில் இனாம்குளத்தூர் அருகே ரயில் பாதையில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும், அவரைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை என ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்த வழியே சென்ற ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com