அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது

முசிறி அருகே சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற இருவரை முசிறி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.


முசிறி அருகே சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற இருவரை முசிறி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
முசிறி அருகே ஏவூர் மற்றும் வீரமணிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்கப்படுவதாக முசிறி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், முசிறி போலீஸார் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏவூர் பிள்ளையார் கோயில் அருகே மதுபானம் விற்ற த. ரமேஷ் (34) என்பவரையும் வீரமணிப்பட்டி பாலக்கட்டை அருகே மது விற்ற வெ.தங்கராசு (54) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com