மணப்பாறையில் சாலை விபத்து: இருவர் காயம்

மணப்பாறை அருகே நடைபெற்ற சாலைவிபத்தில் இருவர் காயமடைந்தனர். 


மணப்பாறை அருகே நடைபெற்ற சாலைவிபத்தில் இருவர் காயமடைந்தனர். 
திருச்சி மாவட்டம் துறையூர் கரட்டாம்பட்டியிலிருந்து திருநெல்வேலி நோக்கி 10 டன் சிமென்ட் மூட்டைகள் கொண்ட லாரி வெள்ளிக்கிழமை மதியம் புறப்பட்டுள்ளது. லாரியை மண்பறை பகுதியைச் சேர்ந்த நல்லுச்சாமி மகன் மணி(27) ஓட்டி வந்துள்ளார். லாரி மணப்பாறை வழியாக கோவில்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, புளியமரம், அங்கு நின்றிருந்த மினி சரக்கு வேன் மீது மோதி நின்றது. இதில் மினி சரக்குவேன் ஓட்டுநர் செல்வம்(30) மற்றும் விற்பனை பிரதிநிதி சிவக்குமார்(46) ஆகிய இருவரும் காயமடைந்தனர். விபத்து குறித்து மணப்பாறை போலீஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com