இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் சார்பில் சனிக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி கே.கே.நகர் சுப்ரமணியநகர் பகுதியில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அப்பகுதிகளில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதாகையின் மீது மலர்தூவி மரியாதை செலுத்தினர்.