தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தவர் பலி

திருச்சி காட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர்ஆரோக்ய பிரான்சிஸ் (34). இவர், மர பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.


திருச்சி காட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர்ஆரோக்ய பிரான்சிஸ் (34). இவர், மர பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவி டேரீஸ் மேரியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதில் மனமுடைந்து ஆரோக்யபிரான்சிஸ் குடிபழக்கத்துக்கு அடிமையானார்.
இந்நிலையில்,  மதுபோதையில் இருந்த ஆரோக்ய பிரான்சிஸ்  வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் வியாழக்கிழமை இறந்துகிடந்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com